Saturday 30 April 2011

ஐயையோ ரிசல்ட்..!


பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. தெரிஞ்சா, 108 தேங்காய் உடைக்கணும் - அவர் தலை மேல.!
பின்ன என்ன சார்.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!
பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.
பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும்.
எட்டாவது நிமிஷம் டீ வரும்.
அம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்ஜியார் (சயின்டிஸ்ட் முருகன்!) லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.
பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.
எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.? சினிமா பாட்டு கேக்கணும்னு ஏன் அவ்ளோ ஆசையா இருக்குது?
ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், சினிமா, ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..
காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து டிபன், மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி எவன் வீட்டுக்காவது போய் செஸ் இல்லாட்டி கேரம் போர்டு ஆடிகிட்டே அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.
"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் மே மாதம்.. " ஐயையோ.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே..
நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.
இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை.. ?"னு அப்பா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். அப்பா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை அப்பாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?
அப்பா நகர்ந்ததும் அம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? உங்க அத்தை ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா உங்க அப்பா பக்கத்து உறவுக்காரங்களுக்கு ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!
மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த அப்பா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!
அப்பா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத அப்பாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

கடவுளே.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.. உன் உண்டியல்ல 10 ரூபா போடறேன்.
எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. ஐயையோ.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு மகேஷ் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. கடவுளே.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க
மகேஷையும் பெயில் ஆக்கிடு.. 20 ரூபா டீலிங்..!
அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.
பஸ்ல போயிட்டிருக்கும்போது, கோவில், சர்ச், மசூதி எதையும் விடலை.. என் ரிசல்ட்டுக்காக எல்லா சாமிகிட்டயும் சொல்லி வெச்சாச்சு.. என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.
ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. அம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. அப்பா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. கடவுளே.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. உண்டியல் அக்கவுண்ட்டில் இன்னும் ஒரு 5 ரூபாய் கூடியது.
ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.
பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..
என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..
நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..
திடீர்னு மகேஷ் வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. மகேஷை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!
மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க மகேஷ் வீட்டு கிட்ட போனேன்.  " பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "
என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?
அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா மகேஷ் நம்பரை பேப்பர்ல தேடியிருக்கேன்.
பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.
அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத அப்பாவின் முகம் இப்ப அழகா இருந்தது.
மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.
இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.! (நன்றி - விகடன் )

Friday 29 April 2011

விடுதலை புலிகளும் நானும்


எனது சிறுவயதில், நான், என் அக்கா, எங்கள் தோழிகள் இருவர் என ஒரு குட்டி ஊர்வலமாக ஸ்கூல் க்கு சென்று வருவோம். ஒரு 15 நிமிட நடை பயணம். அதை நாங்கள் 1 /2 மணி நேரம் நடப்போம். வீடு செல்லும் வழி நெடுக, பெரிய தூண்களும், பெரிய திண்ணையும், கொண்ட வீடுகள் நிறைந்திருக்கும் . முடிந்தவரை எல்லா திண்ணையிலும் ஏறி எறங்கி விளையாடிகொண்டே வீடு செல்வோம். 

ஒரு முறை, அது போல் நடந்து போய் கொண்டிருந்தோம். திடீரென சில சைக்கிள்கள் எங்களை வளைத்து பிடித்தன . நாங்கள் பயந்து உறைந்து நிற்க., எங்களை கடத்தி கொண்டு சென்றுவிட்டார்கள் (!) அந்த இளைய்ந்கர்கள் . ஒரு பெரிய திண்ணை வீட்டில் எங்களை இறக்கி விட்டு , உள்ளே வருமாறு அழைத்தர்கள் புன்முறுவலோடு எங்கள் பயத்தை ரசித்து கொண்டே. எங்கள் நால்வருக்கும், கொஞ்சம் தைரியம் வந்து விட்டது . ஏனெனில் அந்த வீடு நாங்கள் வீடு செல்லும் வழியில் உள்ள வீடு. ஆனாலும் உள்ளே செல்ல வில்லை. அவர்கள் சாக்லேட் கொடுத்தார்கள். அதோடு நாங்கள் வந்து விட்டோம். 

ஆனால் தினசரி அவர்கள் (4-5 பேர் ) பள்ளி விடும் நேரம் என்கல்லுக்காக வாசலிலே காத்து கொண்டிருப்பார்கள். இலங்கை தமிழில் கொஞ்சுவார்கள். நாங்களும்  அந்த வீடிற்கு செல்ல தொடங்கினோம், ஒரு காலேண்டர் கொடுத்தார்கள் , பிரபாகரன் போட்டோ போட்ட காலேண்டர். (அதை என் மாமா ரொம்ப நல்ல இருக்குன்று எடுத்து சென்று விட்டார் ).

சில மாதங்கள் பிறகு அந்த வீடு பூட்டியே கிடந்தது . அதன் பிறகு அவர்களை பார்க்கவே  இல்லை. எங்கள்  தெருவில் சிலர் சொன்னார்கள் அந்த வீட்டில் இருந்தவர்கள் விடுதலை புலிகள்

Wednesday 6 April 2011

Problems by High heels


High heels definitely add to your glam quotient, but wear them right to save your posture.
DON'T BEND TOO MUCH
Watch your walk while wearing high heels as it places extra pressure on the knee, and may result in osteoarthritis.
ANGLE IT RIGHT
The calf muscles may contract and adjust to the angle of the high heels. They may shorten or tighten, causing pain.
ACHILLES TENDON
When the front of your foot moves down in relation to the heel, the tendon tightens up. It results in pain in the foot.
STRAP TALE 
Beware of those heel straps that can make your walk uncomfortable by developing an enlargement called Haglund's Deformity.
ANKLE INJURY 
Be more cautious while stepping out because wearing those high- heeled shoes might impair your balance, leading to a broken ankle.
METATARSALGIA 
When you wear those sky-touching heels, the body weight gets redistributed unnaturally resulting in joint pain in the ball of the foot.
Height of Your Heel
Biomechanical changes occur on the feet while wearing high heels. The correlation between the heel height and amount of pain, pressure and strain is felt on your feet. Check out how heel height puts pressure on the forefoot:
3 inch heel +76%
2 inch heel +57%
1 inch heel +22%
Source: American Academy of Orthopaedic Surgeons.
Wrong Posture
High heels push the centre of mass in the body forward, taking the hips and the spine out of alignment.
Watch Your Toe
High heels push the lumbar spine into a stretched mode and that takes a toll on your lower back.
BUNIONS or painful swellings of the big toe. They are caused by pressure and ill-fitting shoes.
NERVE DAMAGE on the sole of the foot can cause numbness and pain. It is very common with high heels.
- Compiled by Damayanti Datta

Tuesday 5 April 2011

Eela Porali

2006 இல் மூதூர் வரையும்,அதன் பின்னர் யாழ்ப்பாணம் மண்கும்பான் வரையும் சென்று திடீர் என திரும்பி வந்தனர் எமது போராளிகள். அப்போது ஏன் இத்தனை இழப்புகளோடு திரும்பி வந்தனர்.என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்ததுதான்.
ஆம்! இத்தனை வலிமையுடன் இருந்த நமது போராளிகள் இப்படி முடக்கப்பட்டதன் காரணம்?
ஒவ்வொரு தடவையும் நாம் பல இடங்களை கைப்பற்றிய பொழுதெல்லாம் இலங்கை அரசு இந்தியாவுடனும் சில மேற்கு நாடுகளுடனும் சேர்ந்து எமது படைகளை பின்வாங்க செய்தனர்.
இதற்கு இலங்கை அரசு இந்தியாவின் துணையுடன் எம் தலைமையை பணிய வைத்து அந்த நிகழ்வுகளை கச்சிதமாக முடித்து வந்தது. நம் தலைமை அந்த நிர்ப்பந்தத்துக்கு பணிந்ததன் காரணம் மேற்குலகுடன் இணைந்து நம் போராட்டம் பயங்கரவாத போராக திரிபுபடுத்தி அழிக்கப்படும் என இந்தியா கூறிவந்ததுதான்.அதனால் இந்தியாவின் சொல்லை தட்ட முடியாத நிலை.
அதேபோலத்தான் நமது கட்டுப்பாட்டுக்குள்ளும் சில இடங்களை சிங்களம் பிடித்திருந்த பொழுது இந்தியா, நோர்வே போன்ற சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடனேயே நமது தரப்பும் செய்தது.
இதன் காரணமாக இராணுவ சமநிலையை இருபகுதியினரும் தக்கவைத்து வந்தனர் .

[குறிப்பு:- ஒட்டுமொத்த நகர்வுகளும் அல்ல. இராணுவ தழர்ச்சி நடைபெற்று வந்த காலத்தில் அதாவது புலிகள் கை ஓங்கி சென்ற காலத்தில் தான் இப்படி நடந்தது].

இப்படி சமநிலையை தக்கவைத்து கொள்வதற்கு எமது மேற்குலக பொறுப்பாளர்கள் அன்ரன் பாலசிங்கம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தமது அரசியல் வலிமைகளை நன்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நடைமுறையை நம்பித்தான் எமது இறுதி கால நகர்வும் நடந்தது.
மேற்குலகம் அப்போதைய தலைவர்கள் கே.பி,நெடியவன், காஸ்ரோ ஆகியோர் நமது அப்போதைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் சொல்லும் விடையங்களை நம்பி நாம் கழுத்தறுக்கப்பட்டோம் என்பது தான் உண்மை.

ஆம்
யுத்தம் நம்மை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தபொழுது முன்னைய போல் இம்முறையும் நடக்கும்,படையினர் பின்வாங்கப்படுவர் என எதிர்பார்த்தோம் நடக்கவில்லை.. இந்தியாவின் பல தலைவர்களையும் நோர்வேயிடமும் கேட்டுப்பர்த்தோம் பதிலேதும் கிடைக்கவில்லை. இதனால் நம் புலம்பெயர் தலைவர்களை குடைந்தெடுத்தார்கள் நம் தலைமைகள் .
ஆனால் அவர்கள்
அந்த நாடுகள் கைவிரித்துவிட்டனர் எனவும்.இம்முறை போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா விரும்புவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை [புலிகள் தலைமைப்பீடத்தை] செய்யச்சொல்லியும் கூறப்பட்டது. இந்த செய்தியால் நம் தலைமை ஆடிப்போனது ஏன் இப்படி நடந்தது? எதனால் இப்படி சொல்லப்பட்டது ? என்ற கேள்விகளுடன்.உங்கள் இராஜதந்திர நகர்வுகளை நம்பித்தானே நாம் எமது படைகளை பின்வாங்கி சென்றோம் என கூறி புலம்பெயர் தலைமைகளுடன் சீறிப்பாய்ந்தனர் நமது தலைவர்கள் .
எனவே இந்த கட்டத்தில் நம் ஒட்டு மொத்தமாக நம்பியவர்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்து கவிழ்த்து விட்டனர் நம் தலைமை பீடத்தை .
இருந்தும் மறுபடியும் பேசச்சொல்லி வற்புறுத்தப்பட்டது. நாம் அப்பொழுது இருந்த நிலைமையில் நாம் ஒடுக்கப்பட்டு இருந்ததால் இலங்கை அரசு அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டது, உலகுக்கு மக்களை மீட்கும் போர் செய்வதாக சொல்லி எம் இதயம்வரை நகரத்தொடங்கியது.
சடுதியாக மாற்று வழி செய்யச்சொல்லி எமது தலைமை புலம்பெயர் தேசத்தை பணித்தது. இப்பொழுது தான் இந்தியாவின் நகர்வு நேரடியாக நம்மை கால்வாரிவிட்டது
இந்தியாவின் கருணாநிதி அந்த நேரத்தில் தேர்தலை மையமாக கொண்டு நகர்வுகளை செய்தார். அவரது மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் செயல் நெறிக்குள் இருந்து செயற்பட தொடங்கியது. இதை நாம் உடனடியாக அறிந்து கொள்ளும் நிலையில் அன்று இருந்திருக்கவில்லை. காரணம் நம் புலனாய்வு தகவல்கள் வெளி நாடுகளில் இருந்து உண்மையானதாக நம்மை வந்து சேரவில்லை.
அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுடன் தழர்ந்த நம் வெளிநாட்டு நகர்வுகள் அண்ணன் தமிழ்ச்செல்வனுடைய இழப்பின் பின் அடியுடன் தொலைந்துவிட்டது என்பது உண்மை. இதனால் தான் நம் புலம்பெயர் நாடுகளின் ஆதரவை ஒருதுளிகூட பெறமுடியாது போனது.
மாற்று வழி செய்வதற்கு நம் புலம்பெயர் தலைமையுடன் இந்தியாவின் கருணாநிதியின் அரசையும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதிரியார் ஜெகத்காஷ்பாரையும் தொடர்பு கொண்டவண்ணம் இருந்தது நம் தலைமை. அப்பொழுது தான் நம்பியார் கனிமொழி பாதிரியார் என எல்லோரும் மாற்று வழி செய்ய சில கட்டுப்பாடுகளை விதித்தனர்,
இந்த நிலையில் நம் போராளிகளையும் மக்களையும் காப்பற்ற வேண்டும் என நம் தலைமை எமது நிலைப்பாட்டை முன்வைத்தது.

Test yr Idiocy


Test for Idiocy 
B
elow are four (4 ) questions and a bonus question. You have to answer them instantly. You can't take your time, answer all of them immediately. OK? 


Let's find out just how clever you really are.... 




Ready? GO!!! 


First Question:
 

Y
ou are participating in a race. You overtake the second person. What position are you in? 




 
~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~




 
Answer: If you answered that you are first, then you are
absolutely wrong! If you overtake the second person, you take his place, so you are second! 

Try not to screw up next time. 
Now answer the second question,
but
 don't take as much time as you took for the first one,OK

Second Question:
 
I
f you overtake the last person, then you are...?




 
~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~




 
Answer: If you answered that you are second to last, then you are wrong again. Tell me, how can you overtake the LAST Person? 


You're not very good at this, are you?




 
Third Question: 
V
 ery tricky arithmetic! Note: This must be done in your head only.
Do NOT use paper and pencil or a calculator. Try it.
 



Take
 1000 and add 40 to it... Now add another 1000Now add 30.
Add another
 1000. Now add 20Now add another 1000 
Now add 
10What is the total? 




~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~ 



Did you get 
5000 ? 

The correct answer is actually 4100. 




If you don't believe it, check it with a calculator!
Today is definitely not your day, is it? 
Maybe you'll get the last question right.... 
...Maybe.
 



Fourth Question: 


Mary's father has five daughters: 1. Nana, 2. Nene, 3. Nini, 4. Nono. What is the ! name of the fifth daughter? 





~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~
 

Did you Answer
 Nunu? 
NO!
 Of course it isn't. 
Her name is
 Mary. Read the question again! 



Okay, now the bonus round:
 

 


A
 mute person goes into a shop and wants to buy a toothbrush. By
imitating the action of brushing his teeth he successfully 
expresses himself to the shopkeeper and the purchase is
done.
 
 


Next, a blind man comes into the shop who wants to buy a pair of
sunglasses; how does HE indicate what he wants? 
 


  
 

~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~




  
 

He just has to open his mouth and ask...
It's really very simple...... Like you!

Need experience to understand this poem

உன்னை .....
உணர வைக்க.....!!!!
உன்னையே...
பயிற்சி களமாக்கி.....!!!
நான் செய்த ......
விளையாட்டில்....!!!!
உன்னை...
விழி மூடி ....
வைத்த வேளை....!!!!
என்னுலகம்....
இருந்ததே.....!!!!
என்ன சொல்ல...????
உன்னை தொட்ட ....
காற்று வந்து....
என்னை தொட்ட போது...!!!
காற்றும் கவிதை...
சொல்கிறதே ....!!!
என்ன சொல்ல....???
உன்னுடல் தீண்டிச் சுகம்....
கொடுத்த சாரல்.....!!!
என்னைத் தீண்டியதும் .....
சந்தன மழையைப் பொழிகிறதே....???
என்ன சொல்ல...???
சில்லென்ற சிற்றோடையின்....
சுகத்தை நீயறிய....!!!
ஓடையில் மிதந்த.....
காகித ஓடமாய்....
என் நினைவலைகள் ....
நீந்தி செல்வதை....
என்ன சொல்ல...!!!
அருகிருந்த ....
மரத்தின் மீதமர்ந்த.....
காக்கை,,குருவியின்...
நனையும் சுகம்......!!!!
உனையறியச் செய்து விட்டு...
நானோ இங்கே....
மழையில் நனைந்த ....
குருவியாய்.....
சிறகை படபடத்து.....????!!! சுகி ஈஸ்வர்

Monday 4 April 2011

10things to learn from japan


10 things to learn frm japan
1. THE CALM-Not a single visual of chest-beating or wild grief. Sorrow itself has been elevated.
2. THE DIGNITY-Disciplined queues for water and groceries. Not a rough word or a crude
gesture.
3. THE ABILITY-The incredible architects, for instance. Buildings swayed but didn’t fall.
4. THE GRACE-People bought only what they needed for the present, so every body could get something.
5. THE ORDER-No looting in shops. No honking and no overtaking on the roads. Just understanding.
6. THE SACRIFICE-Fifty workers stayed back to pump sea water in the N-reactors. How will they ever be repaid?
7. THE TENDERNESS-Restaurants cut prices. An unguarded ATM is left alone. The strong cared for the weak.
8. THE TRAINING-The old and the children, everyone knew exactly what to do. And they did just that.
9. THE MEDIA-They showed magnificent restraint in the bulletins. No silly reporters. Only calm reportage.
10. THE CONSCIENCE-When the power went off in a store, people put things back on the shelves and left quietly.
(Thanks to Binoy)